tamilnadu

img

கச்சா எண்ணெய் விலையின் நிலைத்தன்மையை உறுதிபடுத்த சவுதியிடம் இந்தியா வேண்டுகோள்

கச்சா எண்ணெய் விலையை, நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவுமாறு சவுதி அரேபியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை நிலைத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவுக்கு, இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் எரிசக்தி  துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியிடம், கச்சா எண்ணெயின் விலையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க, ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் கூட்டமைப்புகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில், இரு நாடுகள் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.